செய்திகள்
பணம் பறிப்பு

செங்குன்றம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி பணம்-செல்போன் பறிப்பு

Published On 2019-10-24 06:21 GMT   |   Update On 2019-10-24 06:21 GMT
செங்குன்றம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி பணம்-செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அன்னை இந்திரா நினைவு நகரைச் சேர்ந்தவர் இடி மன்னன் ( வயது 42).

இவர் இவரது நண்பர்கள் இரண்டு பேருடன் சோழவரம் பழைய விமான தளம் எதிரே உள்ள ஒரு மைதானத்தில் இரவு மது அருந்தினார்.

அப்போது நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் இடி மன்னனிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டுள்ளனர்.

எனவே, இடிமன்னனை கத்தியால் தலையில் வெட்டி அவரிடமிருந்த ரொக்கப் பணம் ரூ. 14 ஆயிரம் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றனர் இடி மன்னன் செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News