செய்திகள்
மாணவர்களுக்கு குட்கா விற்பனை - 2 பேர் கைது
மாதவரம் பஸ் நிலையத்தில் மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மாதவரம்:
மாதவரம் பஸ் நிலையம் அருகில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர்கள் மாதவரம் உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் ரோகித்பாண்டி என்பது தெரியவந்தது
இவர்கள் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மாவா, குட்கா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது
ரோகித் பாண்டி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அவர் ஒருமுறை உத்தரபிரதேசம் சென்று அங்கிருந்து மாவா செய்ய தேவையான பொருட்களை வாங்கி வந்து தயார் செய்துள்ளார்.
இவர்களிடம் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மாவா செய்யும் மூலப்பொருட்களையும் மாவா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மாதவரம் பஸ் நிலையம் அருகில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர்கள் மாதவரம் உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் ரோகித்பாண்டி என்பது தெரியவந்தது
இவர்கள் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மாவா, குட்கா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது
ரோகித் பாண்டி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அவர் ஒருமுறை உத்தரபிரதேசம் சென்று அங்கிருந்து மாவா செய்ய தேவையான பொருட்களை வாங்கி வந்து தயார் செய்துள்ளார்.
இவர்களிடம் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மாவா செய்யும் மூலப்பொருட்களையும் மாவா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.