செய்திகள்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பு நன்றாக இருக்கிறது. இடைத்தேர்தலுக்கான பிரசாரமாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த கால வரலாற்றை எடுத்துக்கொண்டு இடைத்தேர்தலில் பேசி இடைஞ்சலை ஏற்படுத்தி பேசுவதை சீமான் தவிர்த்து இருக்கலாம்.
நடிகர் கமல்ஹாசன் அப்படித்தான் சொன்னார். தி.மு.க.வும் இந்திய இறையாண்மைக்கு எதிரான விவாதங்களில் பங்கேற்றனர். சீமானின் கருத்து அதுபோல்தான் உள்ளது. ராஜீவ்காந்தி தமிழக மண்ணில் இறந்து உள்ளார். அந்த பயங்கரவாதத்தை யாரும் ஏற்க முடியாது. ராஜீவ்காந்தி மரணம் துரதிர்ஷ்டவசமானது.
சீமானின் கருத்து வரவேற்கத்தக்கதல்ல. ஆனால் சீமான் கட்சியை தடை செய்யவேண்டும் என்றால் மற்ற கட்சிகளையும் தடை செய்யவேண்டும். சாதாரண ஆட்களே டாக்டர் பட்டம் வாங்கும்போது முதல்-அமைச்சருக்கு டாக்டர் பட்டம் தருவதில் தவறு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பு நன்றாக இருக்கிறது. இடைத்தேர்தலுக்கான பிரசாரமாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த கால வரலாற்றை எடுத்துக்கொண்டு இடைத்தேர்தலில் பேசி இடைஞ்சலை ஏற்படுத்தி பேசுவதை சீமான் தவிர்த்து இருக்கலாம்.
நடிகர் கமல்ஹாசன் அப்படித்தான் சொன்னார். தி.மு.க.வும் இந்திய இறையாண்மைக்கு எதிரான விவாதங்களில் பங்கேற்றனர். சீமானின் கருத்து அதுபோல்தான் உள்ளது. ராஜீவ்காந்தி தமிழக மண்ணில் இறந்து உள்ளார். அந்த பயங்கரவாதத்தை யாரும் ஏற்க முடியாது. ராஜீவ்காந்தி மரணம் துரதிர்ஷ்டவசமானது.
சீமானின் கருத்து வரவேற்கத்தக்கதல்ல. ஆனால் சீமான் கட்சியை தடை செய்யவேண்டும் என்றால் மற்ற கட்சிகளையும் தடை செய்யவேண்டும். சாதாரண ஆட்களே டாக்டர் பட்டம் வாங்கும்போது முதல்-அமைச்சருக்கு டாக்டர் பட்டம் தருவதில் தவறு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.