செய்திகள்
மாயம்

திருவண்ணாமலையில் நகை பணத்துடன் பெண் மாயம்

Published On 2019-10-18 10:53 GMT   |   Update On 2019-10-18 10:53 GMT
திருவண்ணாமலையில் நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அண்ணாமலையார் 6-வது தெருவை சேர்ந்தவர் முனவர் கான் (வயது40). இவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குஷ்னா (36). இத்தம்பதிக்கு 4 ஆண்குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் 4 பேரும் சுல்தான் பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

குஷ்னா குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு கொண்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி குழந்தைகளுக்கு மதிய உணவு கொண்டு சென்ற குஷ்னா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடினர், ஆனால் கிடைக்கவில்லை இதையடுத்து அவரது பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை குஷ்னா எடுத்து கொண்டு மாயமானது தெரிய வந்தது.

இது குறித்து குஷ்னாவின் மாமியார் மும்தாஜ் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News