செய்திகள்
கைது

அசோக்நகரில் கோவில் உண்டியலை திருடிய கொள்ளையன் கைது

Published On 2019-10-18 08:48 GMT   |   Update On 2019-10-18 08:48 GMT
சென்னை அசோக்நகரில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

சென்னை வடபழனி 100 அடி சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கினர். அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவன் தண்டையார் பேட்டை பகுதியைச் சேர்ந்த கொள்ளையன் விஜய் (20) என்பது தெரிந்தது. அவனிடமிருந்து ரூ.12 ஆயிரம் ரொக்கம், கத்தி, கடப்பாரை, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அசோக் நகர் திருவீதி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டு வந்ததாக தெரிவித்தான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய அவனது கூட்டாளிகள் 2 பேரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News