செய்திகள்
போலீசார் விசாரணை

செங்கோட்டையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு - போலீசார் விசாரணை

Published On 2019-10-18 08:38 GMT   |   Update On 2019-10-18 08:38 GMT
செங்கோட்டையில் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்ட போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டை:

செங்கோட்டை காந்தி சிலை பின்புறம் உள்ள கழிவுநீர் ஓடையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செங்கோட்டை சரகத்திற்குட்பட்ட காவல்நிலையத்தில் மாயமானவர்கள் என புகார் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News