செய்திகள்
தற்கொலை

கடன் பிரச்சினை- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

Published On 2019-10-18 03:57 GMT   |   Update On 2019-10-18 03:57 GMT
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ளது குயிலாப்பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் வீடு கடந்த மூன்று தினங்களாக பூட்டிக் கிடந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதுபற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் இன்று பூட்டை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது, வீட்டினுள் சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் என 4 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தர மூர்த்திக்கு கடன் பிரச்சினை இருந்தாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

கடன் பிரச்சினையால் பிள்ளைகளுடன் பெற்றோர் தற்கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
Tags:    

Similar News