செய்திகள்
மின்தடை

நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

Published On 2019-10-18 03:28 GMT   |   Update On 2019-10-18 03:28 GMT
நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நெல்லை:

நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர், ராதாபுரம், கரிசல்பட்டி, சேரன்மாதேவி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலக்கல்லூர், சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், ராதாபுரம், பெத்தரெங்கபுரம், கால்கரை, கோலியான்குளம், தனக்கர்குளம், பரமேஸ்வரபுரம் மற்றும் காற்றாலை பண்ணைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும்,

கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, கீழ உப்பூரணி, சேரன்மாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் ராஜேந்திரன், வடக்கன்குளம் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News