செய்திகள்
விஷம்

பாபநாசம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2019-10-16 09:52 GMT   |   Update On 2019-10-16 09:52 GMT
பாபநாசம் அருகே தீராத வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:

பாபநாசம் அருகே மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 50) விவசாயி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த ஜீவானந்தம் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவானந்தம் இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News