செய்திகள்
கோவையில் 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
கோவை மதுக்கரையில் 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மதுக்கரை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜ் கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் சித்ரா (17).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு சரியாக படிப்பு வராததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதை அவரது தாயார் கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தினார். இதனால் மனவேதனை அடைந்த சித்ரா சம்பவத்தன்று வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தார்.
அப்போது அவர் அங்குள்ள பொதுக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதைக்கண்டு செல்வி கதறி அழுதார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை மதுக்கரை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜ் கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் சித்ரா (17).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு சரியாக படிப்பு வராததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதை அவரது தாயார் கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தினார். இதனால் மனவேதனை அடைந்த சித்ரா சம்பவத்தன்று வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தார்.
அப்போது அவர் அங்குள்ள பொதுக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதைக்கண்டு செல்வி கதறி அழுதார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்