செய்திகள்
கோவை ஆனைமலை அருகே பள்ளி செல்லுமாறு கூறிய தாயை தாக்கிய மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் ராஜ்குமார்(60). கூலித்தொழிலாளி இவரது மனைவி தமிழரசி. இவர்களது மகன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
ஆனந்த் பள்ளிக்கு சரிவர செல்லாமல் சுற்றி திரிந்து வந்தார். அதை அவரது தாயார் கண்டித்து பள்ளிக்கு ஒழுங்காக செல்லுமாறு ஆனந்திடம் அறிவுரை கூறி வந்தார். ஆனால் அதைக் கேட்காமல் ஆனந்த் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் சுற்றித் திரிந்து வந்தார்.
சம்பவத்தன்று காலை தமிழரசி அவரிடம் பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதுகுறித்து ஆனந்தின் தந்தை ராஜ்குமார் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் ராஜ்குமார்(60). கூலித்தொழிலாளி இவரது மனைவி தமிழரசி. இவர்களது மகன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
ஆனந்த் பள்ளிக்கு சரிவர செல்லாமல் சுற்றி திரிந்து வந்தார். அதை அவரது தாயார் கண்டித்து பள்ளிக்கு ஒழுங்காக செல்லுமாறு ஆனந்திடம் அறிவுரை கூறி வந்தார். ஆனால் அதைக் கேட்காமல் ஆனந்த் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் சுற்றித் திரிந்து வந்தார்.
சம்பவத்தன்று காலை தமிழரசி அவரிடம் பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதுகுறித்து ஆனந்தின் தந்தை ராஜ்குமார் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.