செய்திகள்
கோப்புப்படம்

பூதலூரில் பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

Published On 2019-10-15 11:22 GMT   |   Update On 2019-10-15 11:22 GMT
பூதலூரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர்:

பூதலூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி மல்லிகா (வயது 40). இவர் பூதலூர் ரெயிலடியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வேலைக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பூதலூர் ரெயில்வே மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மல்லிகாவின் கழுத்தில் இருந்த 3பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி மல்லிகா பூதலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்ததாகவும், ஓட்டியவன் ஹெல்மெட் அணிந்திருந்தான் என்றும் பின்னால் அமர்ந்திருந்தவன் தான் சங்கிலியை பறித்ததாகவும், அவன் ஹெல்மெட் அணியவில்லை என்றும் மல்லிகா தெரிவித்தார். இதுதொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News