செய்திகள்
செம்மரக்கட்டைகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Published On 2019-10-11 07:59 GMT   |   Update On 2019-10-11 07:59 GMT
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை அவர்கள் மடக்கி நிறுத்தினர். கார் நின்றவுடன் அதிலிருந்த டிரைவர் உள்பட 2 பேர் இறங்கி தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் சுமார் 600 கிலோ எடை கொண்ட உயர்ரக செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். காருடன் பிடிபட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் கும்மிடிப்பூண்டி வனசரக அலுவலர் மாணிக்கவாசகத்திடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News