செய்திகள்
கோப்பு படம்

அதிராம்பட்டினம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

Published On 2019-10-10 16:08 GMT   |   Update On 2019-10-10 16:08 GMT
அதிராம்பட்டினம் அருகே மர்மமான முறையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள பரக்கலக்கோட்டை வடகாடு கிராமம். இப்பகுதியில் செல்லக்கூடிய பாட்டுவணாசேரி ஆற்றுப்பகுதியின் அருகே மண் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிணம் கிடந்தது .

இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு ஆண் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்று விசாரணை செய்து வருகிறார்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் ஆண் இறந்து கிடப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News