செய்திகள்
தங்க நகை திருட்டு

டி.ஆர்.பி. தேர்வு எழுத சென்ற பெண்ணின் 5½ பவுன் நகை திருட்டு

Published On 2019-10-01 17:52 GMT   |   Update On 2019-10-01 17:52 GMT
டி.ஆர்.பி. தேர்வு எழுத சென்ற பெண்ணின் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சங்கீத பிரியா (வயது 38). எம்.சி., பி.எட். படித்துள்ளார். இவர் டி.ஆர்.பி. தேர்வு எழுத நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு வந்தார். தேர்வு மையத்தில் நகை அணிந்து செல்லக்கூடாது என்பதால் சங்கீதா பிரியா தான் அணிந்திருந்த 2 தங்க வளையல்கள், மோதிரம், கம்மல்கள் என 5½ பவுன் நகையை கழற்றி பையில் வைத்து, அதனை தேர்வுக்கூட அறைக்கு வெளியே வைத்திருந்தார்.

பின்னர் தேர்வு எழுதிவிட்டு வந்து பார்த்தபோது நகையுடன் பையை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சங்கீத பிரியா திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News