செய்திகள்
கோப்பு படம்

கோவை ஆட்டோ டிரைவர் கொலையில் மதுரை கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்

Published On 2019-10-01 12:26 GMT   |   Update On 2019-10-01 12:26 GMT
ஆட்டோ டிரைவர் கொலை தொடர்பாக மதுரை மாவட்டம் வாடிபட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரணடைந்தனர்.
கோவை:

கோவை சரவணம்பட்டி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் அருண்பிரசாத் (வயது 28). ஆட்டோ டிரைவர்.

இவர் கடந்த 28-ந்தேதி கீரணத்தம் ரோட்டில் உள்ள ஒரு ஐ.டி. பார்க்க அருகே ஆட்டோவுடன் நின்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அருண்பிரசாத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அருண்பிரசாத் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஆட்டோ டிரைவர் கொலை தொடர்பாக மதுரை மாவட்டம் வாடிபட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விஜயன், சதான் ஆகியோர் சரணடைந்தனர்.
Tags:    

Similar News