செய்திகள்
கொள்ளை

கொளத்தூரில் ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-09-30 08:58 GMT   |   Update On 2019-09-30 08:58 GMT
சென்னை கொளத்தூரில் ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கொளத்தூர்:

கொளத்தூர் மகாவீர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் நெபுலி. இவர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார்.

இவரது வீட்டின் கீழ் தளத்தில் தந்தையான ஓய்வு பெற்ற தாசில்தார் குழந்தை சாமி, தாயான ஓய்வு பெற்ற நீதிபதி இந்திராணி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

கடந்த 22-ந்தேதி அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தென்காசிக்கு சென்றனர். நேற்று மாலை அவர்கள் வந்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ராஜமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News