செய்திகள்
தக்காளி

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

Published On 2019-09-30 08:57 GMT   |   Update On 2019-09-30 09:58 GMT
வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதேபோல் பீன்ஸ், அவரைக்காய் விலையும் அதிகரித்துள்ளது.
போரூர்:

கோயம்பேடு மார்கெட்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் தினமும் 350 லாரிகளில் விற்பனைக்கு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தினசரி 70 முதல் 80 லாரிகள் வரை வந்த தக்காளி லோடுகள் இன்று 55 லாரிகளில் மட்டுமே வந்தது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.20-க்கு விற்ற ஒரு கிலோ பெங்களூர் தக்காளி தற்போது ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் பீன்ஸ், அவரைக்காய் விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற பீன்ஸ் தற்போது ரூ. 80-க்கும், ரூ. 20-க்கு விற்ற அவரைக்காய் தற்போது ரூ. 45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறி மொத்த விலை விபரம் வருமாறு:-

நாட்டு தக்காளி - ரூ.38
பெங்களூர் தக்காளி - ரூ.40
உருளைக்கிழங்கு - ரூ.18
சி.வெங்காயம் - ரூ.50
கத்தரிக்காய் - ரூ.10
வெண்டைக்காய் - ரூ.15
கோவக்காய்  - ரூ.15
பாகற்காய் - ரூ.20
பீன்ஸ் - ரூ.55
முள்ளங்கி -  ரூ.20
கொத்தவரங்காய் - ரூ.15
கேரட் - ரூ.30
பீட்ரூட் - ரூ.15
அவரைக்காய் -  ரூ.45
முட்டைகோஸ் - ரூ. 8
புடலங்காய்  ரூ.-10
பச்சைமிளகாய் -  ரூ.25
இஞ்சி -  ரூ.140
வெள்ளரிக்காய் -  ரூ.15

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த வெங்காயத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஆந்திரா வெங்காயம் ரூ. 35-க்கும், நாசிக் வெங்காயம் ரூ. 60-க்கும் விற்பனை ஆகிறது.

வட மாநிலங்களில் வெங்காயம் ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்கப்படுகிறது. இதையடுத்து வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News