செய்திகள்
திண்டுக்கல் அருகே போலீஸ் வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சின்னப்பன்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் மனோஜ்குமார் (வயது 21). இவர் சிறு வயதில் இருந்தே போலீஸ் வேலைக்கு செல்ல வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போலீஸ் தேர்வை மனோஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் அஜித்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த தேர்வில் அஜித்குமார் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மனோஜ்குமார் தோல்வியடைந்ததால் தேர்வாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மனோஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சின்னப்பன்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் மனோஜ்குமார் (வயது 21). இவர் சிறு வயதில் இருந்தே போலீஸ் வேலைக்கு செல்ல வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போலீஸ் தேர்வை மனோஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் அஜித்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த தேர்வில் அஜித்குமார் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மனோஜ்குமார் தோல்வியடைந்ததால் தேர்வாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மனோஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.