செய்திகள்
கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- நெசவு தொழிலாளி போக்சோவில் கைது

Published On 2019-09-25 11:39 GMT   |   Update On 2019-09-25 11:39 GMT
உடுமலை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெசவுத் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடியை சேர்ந்தவர் கணேசன் (55) நெசவுத் தொழிலாளி.

இவர் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமிகளின் தாய் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குபதிவு செய்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News