செய்திகள்
கைது

ஓடும் ரெயிலில் கைப்பை திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2019-09-21 12:19 GMT   |   Update On 2019-09-21 12:19 GMT
ஓடும் ரெயிலில் கைப்பை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் வெங்கட்கிருஷ்ணன் (வயது 41). இவர் ஓமன் நாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 19-ந் தேதி இவர் சென்னையில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்தார்.

ரெயில் கோவை வந்து சேர்ந்த போது வெங்கட்கிருஷ்ணன் வைத்து இருந்த கைப்பை திருட்டு போனது. கைப்பையில் ரூ. 10 ஆயிரம் பணம், பாஸ்போர்ட், வெளிநாட்டு பணம் மற்றும் செல்போன் இருந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கோவை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் 3 போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது 2 வாலிபர்கள் வெங்கட்கிருஷ்ணனின் கைப்பையை திருடி ரெயிலில் இருந்து இறங்கி தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த வாலிபர்களை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபுசேட் (21), சையது இபுராகிம் (30) என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News