செய்திகள்
நெற்குன்றத்தில் அழகு நிலைய ஊழியரிடம் செல்போன் பறிப்பு
நெற்குன்றத்தில் அழகு நிலைய ஊழியரிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர்:
முகப்பேர் மேற்கு பாரதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கவுதம்(24). நெற்குன்றத்தில் உள்ள அழகு நிலையத்தில் அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு 11 மணி அளவில் பணி முடிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கவுதமின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.