செய்திகள்
உடைக்கப்பட்ட சாமி சிலைகள்.

தளி அருகே சாமி சிலைகள் உடைப்பு

Published On 2019-09-17 16:23 GMT   |   Update On 2019-09-17 16:23 GMT
தளி அருகே நள்ளிரவில் சாமி சிலைகளை சமூக விரோதிகள் கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
தேன்கனிகோட்டை:

தேன்கனிகோட்டை வட்டம் தளி அருகே உள்ள உலி வீரணப்ஹிள்ளி கிராமத்தில் பஸ்நிலையம் அருகில் அரசமரத்தடியில் நாகர் சிலைகள் உள்ளது. இதனை அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பூஜைசெய்து வழிபட்டு வந்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சமூக விரோதிகள் சிலர் மூன்று நாகர்சிலைகளை கடப்பாறையால் உடைத்து பெயர்த்துள்ளனர். 

இதேப்போல் இப்பகுதி கோகுல் ஆசிரமம் அருகில் இருந்த 8 நவகிரக சிலைகளையும் அடியோடு பெயர்த்து உடைத்துள்ளனர். சிலைகள் உடைத்திருந்தது கண்ட பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். பின்னர் அப்பகுதியில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் திரண்டனர்.

இது குறித்து மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரில் சாமிசிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கண்டு பிடித்து கைது செய்து, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.
Tags:    

Similar News