செய்திகள்
நகை மாயம்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 8 பவுன் நகையுடன் கைப்பை மாயம்

Published On 2019-09-17 08:18 GMT   |   Update On 2019-09-17 08:18 GMT
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 8 பவுன் நகையுடன் கைப்பை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலபிரசாத் இவரது மனைவி கவிதா (40). இவர் சென்னை கீழ்பாக்கத்தில் வசித்து வரும் தந்தையை பார்ப்பதற்காக பெங்களூரில் இருந்து இன்று காலை 6 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

அப்போது கவிதா தனது இருக்கையின் மேல் வைத்து இருந்த கைப் பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். 8 பவுன் நகையுடன் கைப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. 

இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News