செய்திகள்
பட்டாபிராமில் ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளை
பட்டாபிராமில் ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூர்:
பட்டாபிராம், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத். ரெயில்வே ஊழியர். இவர் கடந்த 14-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றார்.
இன்று காலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம், ¼ கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.