செய்திகள்
சாலிகிராமம் அருகே கடையில் தீ விபத்து
சாலிகிராமம் அருகே கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர்:
சாலிகிராமம் தசரதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அதே பகுதி அருணாசலம் சாலையில் டயர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 2 மணி அளவில் கடையில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது.
விருகம்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்களும் கருகி நாசமானது.