செய்திகள்
மின்தடை

திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2019-09-16 14:30 GMT   |   Update On 2019-09-16 14:30 GMT
திருச்செந்தூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் மின்கோட்டத்துக்கு உட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர், திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. 

எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னகாயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தலவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, திருச்செந்தூர் செயற்பொறியாளர் பாக்கியராஜ் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News