செய்திகள்
ராஜபாளையம் பகுதியில் 16-ந்தேதி மின் நிறுத்தம்
ராஜபாளையத்தில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் மின் பகிர்மான செயற் பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் கூட்டு பராமரிப்பு பணிகள் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொட்டியபட்டி மற்றும் முத்துலிங்காபுரம் பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.
அதே போல் நல்லம நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் கூட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன் பட்டி, கிழவிகுளம், சங்கர லிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகர், முதுகுடி ஆகிய பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.