செய்திகள்
சென்னை மாநகராட்சி

அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சகத்துக்கு சீல் -சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Published On 2019-09-10 07:23 GMT   |   Update On 2019-09-10 07:23 GMT
சென்னையில் முறையான அனுமதியின்றி பேனர்கள் வைத்தால், அச்சகத்துக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முறையான அனுமதியின்றி சென்னையில் வைக்கப்படும் பேனர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் அந்த பேனர்களை அச்சிடும் அச்சகத்துக்கு சீல் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், ‘சென்னையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் அச்சகம் மூடி சீல் செய்யப்படும். அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். பேனர் வைக்க அனுமதி எண், நாள், அளவு, இடம், அனுமதி கால அவகாசம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பேனர்கள் வைக்க முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News