செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கல் நகைகள்.

பாரிமுனை லாட்ஜில் 3 கிலோ தங்கத்துடன் 2 பேர் பிடிபட்டனர்

Published On 2019-09-09 12:12 GMT   |   Update On 2019-09-09 12:12 GMT
பாரிமுனை பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்ஜில் 3 கிலோ தங்கத்துடன் இருந்த 2 பேர் பிடிபட்டனர்.

ராயபுரம்:

பாரிமுனை மன்னார் தெரு பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் இன்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அறை ஒன்றில் தங்கியிருந்த 2 வாலிபர்களின் சூட்கேசில் ஏராளமான தங்க நகைகள் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த பிஜு, ஸ்பிஜின் என்பது தெரியவந்தது. இவர்கள் இன்று காலைதான் கேரளாவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு வியாபார ரீதியாக நகைகளை கொண்டு வந்ததாக கூறினர்.

ஆனால் அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து மொத்தம் 3 கிலோ நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளுடன் கேரள வியாபாரிகள் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News