செய்திகள்
தற்கொலை

காங்கயம் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2019-09-09 11:27 GMT   |   Update On 2019-09-09 11:27 GMT
காங்கயம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

காங்கயம் ஊதியூர் அடுத்த தாளக்கரையை சேர்ந்தவர் பராசக்தி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 21). டெய்லர். சம்பவத்தன்று ஐஸ்வர்யா தூக்கில் பிணமாக தொங்கினார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஐஸ்வர்யாவை மீட்டனர். அப்போது கையில் பிளேடால் அறுத்த நிலையில் ரத்தம் வழிந்தது. உடனடியாக அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட ஐஸ்வர்யாவுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று இதேபோல கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் மனமுடைந்து போன அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இடது கையில் பிளேடால் கிழித்தும் அதன்பின்பு தூக்கு மாட்டியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News