முதல்வர், அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க தி.மு.க.வுக்கு தகுதி இல்லை - எச்.ராஜா
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பா.ஜ.க. தேசியசெயலாளர் எச்.ராஜா கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து எச்.ராஜா பேசியதாவது:-
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அந்நிய முதலீடுகளை ஈட்டுவதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கூட வெளிநாடு சென்றுள்ளார். அமெரிக்காவுக்கு சென்ற கருணாநிதி ஆபிரகாம் லிங்கன் சிலை வாங்கி வந்ததை இன்றைய எதிர்க்கட்சியினர் மறந்துவிட்டனர். அ.தி.மு.க. அமைச்சர்களை விமர்சிக்க தி.மு.க.வுக்கு தகுதியில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும், நீதிமன்ற நடவடிக்கைப்படி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கும், பா.ஜனதாவுக்கும் சம்மந்தம் இல்லை என்றார்.