செய்திகள்
விஜயகாந்த் நலம் பெற வேண்டி விஜயாபதி கோவிலில் பிரேமலதா சிறப்பு யாகம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிவன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதியில் விசுவாமித்திரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தையொட்டி சிவன்கோவில், தில்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விசுவாமித்திரர் கோவிலுக்கு வழிபட வந்தார். அவருடன் ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்களும் வந்திருந்தனர்.
பின்னர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிவன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள தில்லை மாகாளியம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் இந்த விசுவாமித்திரர் கோவிலில் வழிபாடு நடத்தி சிறப்பு யாகம் வளர்த்தது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதியில் விசுவாமித்திரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தையொட்டி சிவன்கோவில், தில்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விசுவாமித்திரர் கோவிலுக்கு வழிபட வந்தார். அவருடன் ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்களும் வந்திருந்தனர்.
பின்னர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிவன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள தில்லை மாகாளியம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் இந்த விசுவாமித்திரர் கோவிலில் வழிபாடு நடத்தி சிறப்பு யாகம் வளர்த்தது குறிப்பிடத்தக்கது.