செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே கால் தடுக்கி கீழே விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே மேட்டுப்பாளையம் கொல்லாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவர் அதிகாலை வீட்டின் பின்புறத்தில் உள்ள மைதானத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கால் தடுக்கி கீழே விழுந்ததால் வள்ளியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் இறந்தார்.