செய்திகள்
கிராம சேவக்குகளுக்கு ரூ.5 ஆயிரம் சம்பள உயர்வு- நாராயணசாமி அறிவிப்பு
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், கிராம சேவக்குகளுக்கு ரூ.5 ஆயிரம் சம்பள உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொகுப் பூதியத்தில் பணிபுரியும் கிராம சேவக் உள்ளிட்ட 108 பணியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அவர்கள் பெற்று வந்த ரூ.7 ஆயிரத்து 500 உடன் தற்போது உயர்த்தப்பட்ட தொகையை சேர்த்து ரூ.12 ஆயிரத்து 500 பெறுவார்கள். இவர்களுக்கு 2014-ம் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டது. புதிய சம்பள உயர்வு மூலம் அரசுக்கு ரூ.72 லட்சம் கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.