செய்திகள்
மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை முதல் வன்னியர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற தணிகாசலம் (வயது47). கொத்தனார். வேலை செய்து வந்தார். இவரது மனைவி காமாட்சி (36). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு மனைவி காமாட்சியிடம் வாய்த்தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
இதேபோல் சம்பவத்தன்றும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காமாட்சி வேலைக்கு ஏதும் செல்லாமல் குடித்துவிட்டு வருகிறீர்களே என்று கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த ஆறுமுகம் மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டு வாசலில் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.