செய்திகள்
தட்டார்மடம் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவை மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல், விவசாயி. இவரது மகள் பிரேமா(வயது 25). அங்குள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தவர் பின்னர் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் பிரேமா மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து திருவிழாவுக்கு சென்றவர்கள் திரும்பி வந்தபோது வீட்டில் பிரேமாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
மகள் காணாமல் போனது குறித்து தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் சுந்தரவேல் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான பிரேமாவை தேடி வருகின்றனர்