செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே லாரி மீது பைக் மோதி காண்டிராக்டர் பலி
ஆண்டிப்பட்டி அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் காண்டிராக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் ஆசை தம்பி (வயது 45). டைல்ஸ் ஒட்டும் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் க.விலக்கு பகுதியில் இருந்து வைகை அணை சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டம் அருகே சென்ற போது முன்னால் சென்ற டிப்பர் லாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. பின்னால் வந்த ஆசை தம்பி மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் லாரியின் பின் பகுதியில் மோதினார்.
இதில் படுகாயமடைந்த ஆசை தம்பி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மகன் தமிழரசன் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் ஆசை தம்பி (வயது 45). டைல்ஸ் ஒட்டும் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் க.விலக்கு பகுதியில் இருந்து வைகை அணை சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டம் அருகே சென்ற போது முன்னால் சென்ற டிப்பர் லாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. பின்னால் வந்த ஆசை தம்பி மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் லாரியின் பின் பகுதியில் மோதினார்.
இதில் படுகாயமடைந்த ஆசை தம்பி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மகன் தமிழரசன் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.