செய்திகள்
மரணம்

மதுரையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

Published On 2019-09-03 11:11 GMT   |   Update On 2019-09-03 11:11 GMT
மதுரையில் மாடியில் துணி காயப் போடச் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார்.

மதுரை:

மதுரை பேச்சியம்மன் படித்துறை பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஆனந்தவள்ளி (வயது 33).

இவர் நேற்று வீட்டில் துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக மாடிக்கு சென்றார். அப்போது ஆனந்த வள்ளிக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய அவர், மாடியில் இருந்து விழுந்தார்.

அக்கம், பக்கத்தினரும் குடும்பத்தினரும் ஆனந்த வள்ளியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆனந்தவள்ளி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநகர் நெல்லையப்ப புரத்தைச் சேர்ந்தவர் பால சண்முகநாதன். இவரது மனைவி மணியம்மாள் (வயது 52).

இவர் செனாய் நகரில் உள்ள ஜவுளிக்கடைக்குச் சென்றார். கடைவாசலில் திடீரென மணியம்மாள் மயங்கி விழுந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் அக்கம் பக்கத்தினர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மணியம்மாள் பரிதாபமாக இறந்தார். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News