செய்திகள்
கைது

வல்லம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது

Published On 2019-09-03 08:46 GMT   |   Update On 2019-09-03 08:46 GMT
வல்லம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த வல்லம் அருகே மருதக்குடியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). விவசாயி. இவர் வளர்த்து வரும் மாடு அதே பகுதியை சேர்ந்த ராஜா அசோகன் (32) என்பவரது தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சக்திவேலுக்கும், ராஜா அசோகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா அசோகன், கட்டையால் சக்திவேலை தாக்கினார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தாக்கிய ராஜா அசோகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News