செய்திகள்
திருட்டு

திருவாரூர் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2019-09-01 10:40 GMT   |   Update On 2019-09-01 10:40 GMT
திருவாரூர் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூரை அடுத்த தேவர்கண்டநல்லூர் கடைவீதி அருகே வசித்து வருபவர் குமுதா (வயது 55). இவரது கணவர் தியாகராஜன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களது மகன் ராஜ்குமார், குவைத் நாட்டில் பணியாற்றி வருகிறார். ராஜ்குமாரின் மனைவி பெயர் ஆர்த்தி. இந்த வீட்டில் குமுதா மற்றும் ஆர்த்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். ராஜ்குமார் சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆர்த்தியை பிரசவத்திற்காக திருவாரூரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து ராஜ்குமாரும், குமுதாவும் அங்கேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் ராஜ்குமார் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது. தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்குமார் கொரடாச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவர்கண்டநல்லூரை சுற்றியுள்ள குளிக்கரை, அம்மையப்பன் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் போலீசாரின் ரோந்து பணியை அதிகரித்தால் மட்டுமே திருட்டு குறையும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News