செய்திகள்
கைது

கிருஷ்ணகிரியில் மொபைல் கடையில் செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2019-08-30 16:21 GMT   |   Update On 2019-08-30 16:21 GMT
கிருஷ்ணகிரியில் மொபைல் கடையில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, பெரியசாமி தெருப்பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சிவகுமார் (வயது21). இவர் அப்பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். 

இந்நிலையில் நேற்று காலையில் ஒருநபர் செல்போன் வாங்க சென்றுள்ளார். அதன் பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். அந்த நபர் சென்ற பின்னர் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஒன்று காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த கடையில் வைத்திருந்த  கண்காணிப்பு கேமராவினை பார்த்த போது அந்த நபர் அந்த செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. 

இது குறித்து சிவக்குமார் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் சின்னப்பன் (35) என்பது தெரியவந்தது. பின்னர் சின்னப்பனை பிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News