செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

Published On 2019-08-29 10:56 GMT   |   Update On 2019-08-29 10:56 GMT
விருதுநகரில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
விருதுநகர்:

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் வேலை நாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

இதில் 5 முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. வெல்டர், பிட்டர் முடித்தவர்களை பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களையும் தேர்வு செய்ய உள்ளனர்.

டிப்ளமோ தகுதியுடைய மனுதாரருக்கு ஒரு மாத இலவச திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு முன்னணி மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பிற்காவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொள்ள வேண்டும்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் ரத்து செய்யப்படமாட்டாது.

வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News