செய்திகள்
கைது

வாடகைக்கு ஆட்டோ எடுத்து கஞ்சா விற்ற டிரைவர் கைது

Published On 2019-08-29 09:28 GMT   |   Update On 2019-08-29 09:28 GMT
வாடகைக்கு ஆட்டோ எடுத்து கஞ்சா விற்பனை செய்த டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஆட்டோ மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொடுங்கையூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சிக்கினார். இவர் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறார். 

திருவொற்றியூரை சேர்ந்த துரை என்ற நைனா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு ஒரு கிலோ கஞ்சாவை வாங்கி அதனை சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி ஆட்டோவில் சென்று எழில்நகர், கொருக்குப்பேட்டை பகுதியில் 100, ரூ.120க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அருண்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த ஆட்டோ மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News