செய்திகள்
திருச்சி வங்கி கொள்ளையனை பிடித்த ஆட்டோ ஓட்டுனருக்கு ஆ. ராசா பாராட்டு
திருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்த திருடனை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுனருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பாராட்டு தெரிவித்தார்.
பெரம்பலூர்:
திருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த ஸ்டீபன் என்பவரை பொரம்பலூர் ஆட்டோ டிரைவர் முருகையா பிடித்து கொடுத்தார். இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி. ஆட்டோ ஓட்டுனர் முருகையாவின் நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, ஜெகதீசன், நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.