செய்திகள்
விஷம்

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் இளம்பெண் தற்கொலை

Published On 2019-08-28 06:20 GMT   |   Update On 2019-08-28 06:20 GMT
கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருபவர் சிவநாதன். இவரது மகள் அனுபா(வயது23).

சென்னை கொளத்தூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 16-ந்தேதி திருச்சியில் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்தவர்களிடம் அனுபா தான் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனுபா பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அனுபா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News