செய்திகள்
நித்திரவிளை அருகே குளத்தில் மூழ்கி பெண் பலி
நித்திரவிளை அருகே குளத்தில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நித்திரவிளையை அடுத்த எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த மரியரோசாள் (வயது 80). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச்சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தனர்.
இந்த நிலையில் நடைக்காவு அருகே உள்ள கொட்டைக்காடு குளத்தில் பெண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது குளத்தில் மூழ்கி பலியாகி இருப்பது மரிய ரோசாள் என தெரியவந்தது.
இது குறித்து நித்திரவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன ஜோஸ்லின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.