செய்திகள்
தாக்குதல்

தேனி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது தாக்குதல்

Published On 2019-08-25 12:59 GMT   |   Update On 2019-08-25 12:59 GMT
தேனி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை தாக்கி நபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி:

தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் மயிலம்மாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெகதீஷ்குமார். மயிலம்மாளின் மருகளுக்கும், ஜெகதீஸ்குமாருக்கும் தவறரான பழக்க வழக்கம் இருந்துள்ளது. இதனை கண்டித்தபோதும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். இதனால் மயிலம்மாள் தனது மருமகளை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

இதன் காரணமாக மயிலம்மாள் மீது ஜெகதீஷ்குமார் கடும் ஆத்திரத்தில் இருந்தார். சம்பவத்தன்று மயிலம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News