செய்திகள்
புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்த கஞ்சா பாக்கெட் பறிமுதல்- வாலிபர் கைது
புதுவண்ணாரப்பேட்டையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக துணை கமிஷனர் சுப்புலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.
அவர் புதுவண்ணாரப்பேட்டை, திடீர் நகரை சேர்ந்த பார்த்திபன் என்பது தெரிந்தது. அவரது வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக பாக்கெட்டு போட்டு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக பிடிபட்ட பார்த்திபன் கூறி உள்ளார்.
அவருக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.