செய்திகள்
மரணம்

தஞ்சையில் சேலையில் தீப்பிடித்து பெண் பலி

Published On 2019-08-24 10:26 GMT   |   Update On 2019-08-24 10:26 GMT
தஞ்சையில் சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருணாசல காலனி மேல வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி ஜெயந்தி (வயது 49). சம்பவத்தன்று இவர் வீட்டின் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் இருந்து எதிர்பாராத விதமாக ஜெயந்தியின் சேலையில் மண்ணெண்ணெய் விழுந்து தீப்பற்றியது. இதில் காயமடைந்த ஜெயந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News